×

பலாத்கார வழக்கு கைதான வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை: பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27), மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.  இந்தநிலையில் வசந்தகுமார் ஜாமீன் கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு நீதிபதி ரவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுவை ஏற்க இயலாது என்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.





Tags : Defendant , Rape case, prisoner plea, bail plea, dismissed
× RELATED ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை