×

பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் முக்கிய புள்ளிக்கு விருந்தாக்கி உள்ளாட்சி சீட் பெற முயற்சி : அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி.யிடம் பெண் பரபரப்பு புகார்

கடலூர்: உள்ளாட்சி தேர்தலில் சீட் பெற அதிமுக முக்கிய புள்ளிக்கு விருந்தாக்க அதிமுக பிரமுகர் முயன்றதாக, கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடலூர் மாவட்ட அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
கடலூர் மாவட்டம் முதுநகர், ராமகிருஷ்ணா நகரில் வசிப்பவர் 35 வயது பெண். இவர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த 2016ல் முதுநகர், சோனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர், ஏற்கனவே கடலூர் நகராட்சியில் அதிமுக வார்டு கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். கணவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்தி என்னுடன் நெருங்கி பழகினார். நேரத்துக்கு தகுந்தவாறு ஆசை வார்த்தைகளை கூறி,  பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார்.

 பல்வேறு லாட்ஜ்களுக்கு வரவழைத்து, அங்கேயும் என்னை பயன்படுத்தினார். அப்போது என்னை நிர்வாணமாக்கி  செல்போனில் படம் பிடித்தார். அந்த படங்களை காட்டி,  கூப்பிடும் நேரம் எல்லாம் வரவேண்டும் என்று கூறி, பாலியல் ரீதியாக பயன்டுத்தினார்.   நாளடைவில் தனது தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது. அதை சரிசெய்வதற்கு உன் கணவர் அனுப்பிய பணம், உனது நகை ஆகியவற்றை தரவேண்டும். இல்லையென்றால் ஆபாச படங்களை பேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியூப் போன்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டினார்.  இதையடுத்து மானம் கருதி 11.10.2016 அன்று ரூ.10 லட்சம், 27.10.2016 அன்று ரூ.3 லட்சம், 3.11.2016 அன்று ரூ.20 லட்சம், 11.11.2016 அன்று ரூ.20 லட்சம், 20.12.2016 அன்று ரூ.15 லட்சம் என பல்வேறு காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.81 லட்சத்தை அவரிடமும், டிரைவர் மற்றும் உடன் இருப்பரிமும் கொடுத்தேன்.

தற்போது  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் கடலூர் நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முக்கிய புள்ளிக்கு விருந்தாக்க முயன்றார்.  நான் அதற்கு சம்மதிக்காததால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 13ம் தேதி வெள்ளைதாளில்  கையொப்பம் பெற்றுக்கொண்டனர். மேலும், போலீசில் புகார் அளித்தால் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார்.  எனவே காவல்துறை கண்காணிப்பாளர், மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து, அவரிடம் உள்ள எனது ஆபாச படங்களை அழிக்க உதவி எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : SP ,AIADMK , Rape, porn movie, prime minister, sb, girl
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்