டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு தாக்கல் செய்கிறது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் வழக்கு தொடர்கிறது. இந்த மசோதாவால் சிறுபான்மையினர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு விளக்கமும், உறுதி அளித்த பிறகும் அதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன.