×

அரியலூர் அருகே அழுகிய நிலையில் சாலையோரம் வீசப்பட்ட வெங்காய மூட்டைகள்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அழுகிய நிலையில் வெங்காய மூட்டைகள் சாலையோரம் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் நிலவிவரும் வெங்காய தட்டுப்பாட்டால் வெங்காய விலை புதிய உச்சத்தை எட்டியது. வெங்காயத்தை சேமிப்பதற்கு அரசு உரிய நிபந்தனைகளை வழங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுப்பட்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயம்கொண்டாம்- விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் உள்ள மகிமைபுரம் பகுதியில் 50 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காயம் 10 மூட்டைகளில் அழுகிய நிலையில் வீசப்பட்டுள்ளது. சோதனைக்கு அஞ்சி வணிகர்கள் சாலையோரம் வீசி சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காய தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில் அதிக அளவு வெங்காயம் அழுகிய நிலையில் கொட்டப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Ariyalur , Roadblown onion ,bundles , Ariyalur
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை