×

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை

வேளச்சேரி: மேடவாக்கம், விஜிபி புஷ்பா நகர், சந்தோஷ் தெருவில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேடவாக்கம், விஜிபி புஷ்பா நகர், சந்தோஷ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மீனா (27). இருவருக்கும் கடந்த மாதம் 3ம் தேதி சேலம் மாவட்டம் அந்தியூரில் திருமணம் நடந்தது. ராமலிங்கம் சிறுசேரி உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் மீனா திடீரென புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற பள்ளிகரணை போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணம் ஆகி ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் பள்ளிக்கரணை போலீசார் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Tags : suicide , Adolescent suicide,e same month ,marriage
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை