×

தரமணி பகுதியில் நெரிசல் நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்ணுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை:.சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த தரமணி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது தரமணி தந்தை பெரியார் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த சகுர் பானு (45) என்பவர் தினமும் வேளச்சேரி - தரமணி நூறடி சாலையில் உள்ள கட்டபொம்மன் தெரு சந்திப்பில் போக்குவரத்து போலீசாருக்கு உதவி செய்யும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்.

வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக பணியாற்றி வரும் இவர், பணி முடிந்து ஓய்வு நேரங்களில் குறிப்பாக காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த பணியை அவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் சேவையாகவே செய்து வருகிறார். இந்நிலையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி வரும் பெண் சகுர் பானுவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ேநற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags : Commissioner ,area ,Taramani , Commissioner commends the woman , regulates traffic during, congestion in the Taramani area
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...