×

துறைத்தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிசம்பரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2019ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 2019ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக 5.1.2020 முதல் 12.1.2020 வரை புதுடெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை 27.12.2019 முதல் 12.1..2020 வரை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Dept. ,Announcement ,Tnpsc , Tnpsc
× RELATED ஒன்றிய அரசில் தீவிரமாக வேலை செய்யும் 2 துறை ஈ.டி., ஐ.டி: பாலகிருஷ்ணன் விளாசல்