×

பேரறிவாளன் பரோல் நாளை முடிகிறது

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, 1 மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 12ம் தேதி புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.  அங்கு, பேரறிவாளன் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், தந்தை குயில்தாசனுடன் மருத்துவமனைக்கும் சென்று வந்தார். ஒரு மாத பரோல் நாளையுடன் முடிவதால், நாளை மாலைக்குள் அவர் வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளதாகவும், அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : perarivalan, parole
× RELATED மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில்...