- மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை
- துறை
- குன்னூர்
- குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை
- நீலகிரி…
- மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை
- வனத்துறை?: பொது
- தின மலர்
குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் பழங்கள் காய்த்துள்ளது. அவற்றில் முக்கியமான நாவல் பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை உண்ண வன விலங்குகளான கரடி, யானை உள்ளிட்டவை அதிகளவில் வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. பலாப்பழங்களை உண்பதற்காக யானைகள் கூட்டமாக கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு போன்ற பகுதியில் முகாமிட்டுள்ளது. குட்டிகளுடன் யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். யானைகளின் அருகில் சென்று செல்போனில் புகைப்படம் எடுக்கவும் துன்புறுத்தவோ கூடாது என எச்சரித்துள்ளனர்….
The post மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை appeared first on Dinakaran.