×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது: ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்கள் யாரும் போட்டியிடக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சில  தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில், திருச்சியில் ரசிகர்கள் சிலர்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.  இதுகுறித்து  அறிந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், ரசிகர்கள் யாரும்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவை ரஜினி சார்பில் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் எம்.கலீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில்  நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தரவில்லை. ஆகவே யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின்  கொடியோ, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ, பயன்படுத்தி வாக்கு  சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக மாநில நிர்வாகி சுதாகர்  மாவட்ட செயலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த உத்தரவை மிகவும்  கண்டிப்புடன் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். எனவே, திருச்சி  மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர, பகுதிகளில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி  தேர்தலில் மக்கள் மன்றத்தை சார்ந்த யாரும் போட்டியிடவோ, யாருக்கும்  ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். மீறினால்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மற்ற மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

Tags : fans ,Rajini ,government ,elections , Rajinikanth , warned , fans not to contest , local elections
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...