×

நடிகர் தனுஷ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம்,  மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தனுஷின் மனுவை ஏற்று வழக்கை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.  இந்த வழக்கில் நடிகர் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி கதிரேசன், மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.  இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக, டிச.26க்கு விசாரணையை தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Tags : case trial ,Dhanush , Dhanush case ,trial postponed
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்