×

மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி 10 நாள் ப்ரிட்ஜில் வைத்த கணவன் : உடல் பாகங்களை எரித்தபோது சிக்கினார்

பீட்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி பத்து நாட்களாக வீட்டில் இருந்த ப்ரிட்ஜில் வைத்திருந்தார். அதன் பிறகு உடல் பாகங்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எரித்தபோது போலீசில் சிக்கினார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள மாஜல்நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் சால்வே(என்கிற) அப்துல் ரஹ்மான். இவரது மனைவி ரேஷ்மா பட்டான். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு சஞ்சய் சால்வேயின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அந்த எதிர்ப்பை மீறி சஞ்சய் சால்வே முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றி ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரேஷ்மாவின் நடத்தை மீது சஞ்சய் சால்வேக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு ஒருவருடன் ரேஷ்மாவுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த நவம்பர் 30ம் தேதியன்றும் அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடும் ஆத்திரமடைந்த சஞ்சய் சால்வே கத்தியால் மனைவி ரேஷ்மாவை குத்திக் கொலை செய்தார். பின்னர் ரேஷ்மாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை தனது வீட்டில் உள்ள ப்ரிட்ஜில் வைத்து பூட்டினார். இவ்வாறு பத்து நாட்களாக ரேஷ்மாவின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் ப்ரிட்ஜில் இருந்தன. இந் நிலையில், நேற்றுக் காலை சஞ்சய் சால்வே, ரேஷ்மாவின் உடல் பாகங்களை எடுத்துக் கொண்டு ஊரின் அருகில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதனை யாரோ பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட பிறகு சஞ்சய் சால்வேயை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : bridge Husband , Husband who killed his wife, cut her body ,10-day fridge
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...