சென்னை: பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையால் காவலன் SOS என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆபத்தை உணரும் பெண்கள், காவலன் செயலியின் SOS பட்டனை அழுத்தினால் சில நொடிகளில் போலீசுக்கு தகவல் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் காவலன் SOS செயலியை தரவிறக்கம் செய்து தமது பெயர் உள்ளிட்டவைகளை அவற்றில் பதிவிட வேண்டும்.