×

சசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

கரூர்: சசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் வாலிபர் சுற்றி திரிந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர்  மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நேற்றுமுன்தினம் சுமார் 35 வயது  மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் சுற்றி திரிந்ததோடு, சிறையில் இருக்கும் சசிகலாவை விடுதலை செய்ய கோரி கோஷமிட்டபடியே நடந்து சென்றுள்ளார். இந்த கடைவீதி திருச்சி-கரூர்  தேசிய நெடுஞ்சாலையாக இருந்ததால் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் கடைவீதிக்கு வந்த மக்கள் அலறியடித்து  ஓடினர். பின்னர் சிறிதுநேரத்தில் அவரது வீட்டில் இருந்து வந்தவர்கள் அந்த வாலிபரை அழைத்து  சென்றனர். கடைவீதியில் வாலிபர் அரிவாளுடன் சுற்றி திரிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வாலிபர் சற்று மனநலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது. யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் இதுவரை எந்தவித  நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கரூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில்   சிகிச்சைக்காக அந்த வாலிபர் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : sickles ,streets ,release ,Sasikala: Video viral Silent Shashikala ,men , Shashikala, freedom, youth
× RELATED மக்கள் போராட்டம் எதிரொலி:...