×

உடலில் தீபமேற்றி கண்ணாடி டம்ளரில் யோகா: மாணவர்கள் அசத்தல்

ராஜபாளையம்: திருக்கார்த்திகை திருநாளையொட்டி இருள் நீங்கி மகிழ்ச்சி பெருக வேண்டி ராஜபாளையம் மாணவர்கள் உடலில் தீபமேற்றி கண்ணாடி டம்பளர் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தினர்.  சத்திரப்பட்டி நடுத்தெருவில் உள்ள அரசு உதவி பெறும் விநாயகர் துவக்க பள்ளியில், தமிழ்நாடு யுனைடெட் யோகா சங்க தலைவர் அழகுமுருகன் தலைமையில் தலைமையாசிரியை ஞானசௌந்தரி முன்னிலையில் 4ம் வகுப்பு மாணவ, மாணவிகள் யோகா செய்தனர்.

பத்மாசனம், ஏகபாதசிரசாசனம், பத்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து அசத்தினர். ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் செல்வம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Yoga in Glass Tumbler with Body Lights: Wondering Students
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...