×

குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி

மதுரை: குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். குற்ற வழக்குகளில் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் குற்றவாளிகள் ஜாமீனில் வருகின்றனர் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்; விரைவான நீதியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். வழிப்பறி வழக்கில் கைதான சித்திரைவேல் என்பவர் ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து கூறியுள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கலானதும் நீதிமன்றங்களும் உடனே கோப்புக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags : Criminal Investigation Department ,Judge , Judge
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்