காரைக்குடி: காரைக்குடி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி என்பவர் ரயிலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சி மேற்கொண்ட அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காப்பாற்றினர். காரைக்குடி அருகே கற்பக விநாயகர் நகரை சேர்ந்த வாய் போச முடியாத மாற்று திறனாளி சுப்பிரமணி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளன.