×

சந்திரயான்-3 திட்டத்திற்காக மேலும் ரூ.75 கோடி வழங்க மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை...!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை தவிர்த்து கூடுதலாக ரூ.75 கோடி வழங்கக்கோரி மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவுக்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 8.6 கோடி ரூபாய் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 கோடி ரூபாய் சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்பும் ஏவுகணைத் தயாரிக்கவும், 120 கோடி ரூபாய் ஏவுதளங்கள் மேம்பாடுக்காகவும் இஸ்ரோ ஒதுக்கியுள்ளது.

சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திற்கு 516 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ மேற்கொண்ட சந்திரயான் 2 திட்டத்தில் லேண்டர் தரையிறங்கும்போது பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து சந்திரயான் 3 திட்டம் மூலம் மீண்டும் நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பணிகளைத் தொடங்க உடனடியாக 75 கோடி ரூபாயை, மத்திய அரசிடம் இஸ்ரோ கேட்டுள்ளது.

இதில் ரூ.60 கோடி விண்கல இயந்திரங்கள், உபகரணங்களுக்கும், ரூ.15 கோடி, வருவாய் செலவினங்களுக்கும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : ISRO ,Central ,Central Government , Chandrayaan-3, Central Government, ISRO
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...