திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7ம் திருவிழாவான நேற்று 7ம் நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிலையில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் திரி (காடா துணி) ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.