ஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 62 ரன்களும் எடுத்துள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 56 ரன்களும், எவின் லூயிஸ் 40 ரன்களும் எடுத்துள்ளனர்.