டெல்லி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களை கடுமையான முறையில் கையாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முக்கியம் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.