அலகாபாத்: ஊழல் புகார் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்ட புகாரில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.