×

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: த.மு.மு.க. தொண்டர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் கடடுமன்னார்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நாகையில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Day demonstration ,protest ,demolition ,volunteers ,mosque ,Babri ,Tamil Nadu ,Babri Masjid of Demonstration , Babri Masjid, Cuddalore, Demonstration, DMK Volunteers, arrest
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...