கன்னியாகுமரி: குமரி பரமேஸ்வரன் கோயில் விழாவில் வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நவம்பர் 2ம் தேதி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.