சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் தேர்தலை நிறுத்த நாங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை எனவும், இடஒதுக்கீடு, தொகுதி வரையறை முறையாக இல்லை என்று தான் முறையிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.