சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை முகமது ஹனீப் பாகவி என்பவர் பெயரில் வந்த கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். வெளிநாட்டு வெடிகுண்டுகளை வைத்து கோயிலை தகர்த்துவிடுவோம் என கடிதத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.