×

நைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடத்தல்: இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு

டெல்லி: ஆப்பிரிக்க நாடான நைஜீரியக் கடல் பகுதியில் 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாங்காங் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டு கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய்யுடன் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது இந்த கப்பலை திடீரென கடற்கொள்ளையர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு அந்த கப்பலை கடத்தி சென்றனர்.

இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்டுள்ளது. இதுபற்றிய தகவல், நைஜீரிய நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு கிடைத்தது. இதனை அடுத்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் நைஜீரியா கடற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், கடத்தப்பட்ட கப்பல், நைஜீரிய கடற்படை கண்காணிப்பில், பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நைஜீரிய கடல் பகுதியில் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 18 பேரை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : 18 Indians ,Nigeria Shipping ,Government ,Nigerian , Nigeria, Indian Sailor, India
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்