×

பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில், மத்திய, மாநில அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை நடந்தது. தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் சுதா, முன்னாள் எம்எல்ஏ யசோதா முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘‘இந்தியா முழுவதும் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

இதை தடுத்து நிறுத்த முடியாத மத்திய, மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கோஷம் எழுப்பினர். இதில், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி பேசியதாவது:  இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறை, சட்டத்துறை மற்றும் மத்தியில் ஆளும் அரசு, தமிழகத்தை ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : protests ,Mahila Congress ,women , Women, Violence, Mahila Congress, Demonstration
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...