×

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை

மேட்டூர்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால், பரிசல் இயக்கத்திற்கு நேற்று மீண்டும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து விநாடிக்கு 8,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து ஒனேக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, கடந்த 2 நாட்களாக 7,500 கனஅடியாக இருந்தது.

நேற்று காலை விநாடிக்கு 8,500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அதே போல், ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் 6,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு  அருவிகளில் குளிக்க விதித்த தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.


Tags : Back , Operation ,Prize , Okenacal
× RELATED கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை