×

7வது நாளாக நளினி உண்ணாவிரதம்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார். 7வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். உடல் சோர்வு காரணமாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nalini , Nalini fasting, 7th day
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...