சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வணிக வளாகத்தில் திருட்டு குறித்து விசாரிக்க சென்ற போது செல்போன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிசிடிவி பதிவின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட நிலையில் எஸ்.ஐ. ராஜபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.