சென்னை: தமிழக சட்டப் பேரவையை நோக்கி பேரணி செல்ல முயன்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை மற்றும் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக புதுமைப்பெண்களின் நடைபயணம் என்ற பெயரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில குழு பேரணி நடத்தியது.
இவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து கடலூரில் இருந்தும் திருவண்ணாமலையில் இருந்து கடந்த நவம்பர் 25-ம் தேதி பேரணியை தொடங்கி, நிறைவு நாளான இன்று சென்னை வந்துள்ளனர். பேரணியை தமிழக சட்டப்பேரவை முன்பு நிறைவு செய்ய மாதர் சங்கத்தின் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து தமிழக சட்டப் பேரவை நோக்கி பேரணியை தொடங்கிய மாதர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.