×

மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதால் வருகிற 2030-ல் மலேரியா இல்லா நாடாக இந்தியா உருவாகும்: உலக சுகாதார நிறுவனம்

டெல்லி: மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மலேரியா பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் 2018-ல் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து மலேரியாவுக்கு எதிரான முன்னெடுப்புகள் மிகச்சிறப்பாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,48,000 மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 16,310 ஆகும்.

கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 67,37,000 பேர் மலேரியா நோய் தாக்கப்பட்டவர்கள். பலியானவர்க 9,620 ஆகும். இதே போல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதால் வருகிற 2030-ம் ஆண்டு மலேரியா இல்லா நாடாக இந்தியா உருவாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன மண்டல் இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார்.

Tags : India ,country ,World Health Organization , Malaria, India, World Health Organization
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!