சென்னை: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆகியவை இணைந்து முதல் முறையாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.முகாமில் 89 தனியார் துறை சார்ந்த வேலை வழங்கும் நிறுவனங்களும், 3க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்றன. மொத்தம் 1060 பட்டதாரிகள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களில் 9 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 321 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் 321 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் பார்த்தசாரதி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.