×

84 ஆண்டுகள் பழமையான சுதந்திரதின விழா நினைவு ஆர்ச் லாரி மோதி துண்டு துண்டானது

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் லாரி மோதி 84 ஆண்டுகள் பழமையான சுதந்திர தின விழா நினைவு ஆர்ச் உடைந்து விழுந்து துண்டு துண்டானது. இதில் அருகில் இருந்த சைக்கிள்கள், டூவீலர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ரைஸ்மில் ரோட்டில் ஆர்ச் (வளைவு) அமைக்க, கடந்த 1935ல்  அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின், 1947ல் சுதந்திரம் அடைந்த பின்னர், ‘சுதந்திர தின விழா நினைவு வளைவு’ என பெயரிடப்பட்டது. இந்த சுதந்திர தின நினைவு ஆர்ச், கடந்த 85 ஆண்டுகளாக பலமாக இருந்து வந்தது. நேற்று காலை ரைஸ்மில் ரோட்டில் உள்ள தனியார் நூற்பாலைக்கு பஞ்சு மூட்டைகளை உயரமாக ஏற்றி வந்த லாரி ஒன்று, முடங்கியார் சாலையில் இருந்து இடதுபுறம் உள்ள ரைஸ்மில் ரோட்டுக்கு திரும்பியது. அப்போது, ஆர்ச் மீது லாரி மோதியது.  இந்த விபத்தில் ஆர்ச் சரிந்து விழுந்து துண்டு, துண்டானது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள், டூவீலர்கள் சேதமடைந்தன. 85 ஆண்டு பழமையான ஆர்ச் தூண் சரிந்து விழுந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : truck lorry ,Independence Arch ,Independence , Independence Day ,Arch Lorry
× RELATED வேம்பாரில் உதயசூரியன் சின்னத்திற்கு...