×

பஸ்சுக்காக காத்திருந்தவரை காரில் ஏற்றிச் சென்றனர் போலீஸ் குடியிருப்பில் சிறுமி பலாத்காரம்: ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை

புரி: வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி, போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கும்பலை ஒடிசா போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை பெண் மருத்துவரை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர், மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியுள்ளார்.  நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது, அவ்வழியாக காரில் வந்த 4 பேர் கும்பல், அந்த சிறுமியிடம் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி காரில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் போலீஸ் குடியிருப்புக்கு சென்றனர். அங்கு, சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சில மணி நேரம் கழித்து அந்த சிறுமியை, அவரது வீட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர்.

சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் அளித்த புகாரின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: இதேபோல், கர்நாடகாவில் சிஞ்சோலி பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது  சிறுமியை நேற்று முன்தினம் மதியம் காணாமல் போனார். அவர் நேற்று சிஞ்சோலி கிராமத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சடலமாக கிடந்தார். சிறுமி கழுத்தை நெரித்து கொலை  செய்யப்பட்டிருப்பதும், பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற டெய்லர் மகாதேவப்பா சேடம் (34)  என்பவரை கைது செய்தனர்.

Tags : police force ,Minor ,Kattiruntavarai ,persons , Police, child rape, book
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...