×

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன், பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை, பூக்கடை மற்றும் சவுகார்பேட்டை பகுதிகளில் மொத்த வியாபார கடைகள் உள்ளன. இங்கு  கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன், மணிபர்ஸ், செயின் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் பூக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, மணலியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ஜெகன் (19) என்பதும், இவர்கள் பாரிமுனை பகுதியில் கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன், பணம், செயின் பறித்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு பூக்கடை பேருந்து நிலையத்தில் 3 பேரின் செல்போனை அபேஸ் செய்து கொண்டு சென்றபோது, போலீசில் சிக்கியதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 4 செல்போன், பணம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜெகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags : 2 people arrested ,using cellphone
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...