×

புழல், புரசைவாக்கம் பகுதியில் 2 பேரை அரிவாளால் வெட்டி வழிப்பறி : ஆசாமிகளுக்கு வலை

புழல்: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ஷா (25). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் விக்ரம் ஜோட்டா (20). கிளீனர். இவர்கள் இருவரும், கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை வந்தனர். நேற்று அதிகாலை லாரியை புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள புக்கிங் ஆபீஸ் அருகே நிறுத்திவிட்டு தூங்கினர். அப்போது பைக்கில் வந்த நபர், விக்ரம் ஜோட்டாவை எழுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த ஆசாமி திடீரென விக்ரம் ஜோட்டாவை அரிவாளால் வெட்டி, ₹200 மற்றும் ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்டு தப்பினார்.

தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயத்துடன் இருந்த விக்ரம் ஜோட்டாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கீழ்ப்பாக்கம்: புரசைவாக்கம் வாளைமா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (21), மெக்கானிக்.  இவர், நேற்று முன்தினம் இரவு தனது சகோதரன் கமல் என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு ராஜரத்தினம் தெருவில் சென்றபோது, ஒரு ஆசாமி, இவர்களை வழிமறித்து அரிவாளால் மணிவண்ணனின் கையில் வெட்டிவிட்டு, அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். காயமடைந்த மணிவண்ணனை சகோதரன் கமல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார். புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Tags : area ,Purasivakavu ,Puzhal , Puzhal, Purasivakavu area, 2 people cut by sickle
× RELATED புழல் மத்திய சிறைச்சாலை எதிரே பழுதான குடிநீர் பைப்லைன் சீரமைப்பு