×

இளம்பெண்ணை காரில் கடத்திய ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 28ம் தேதி வீட்டின் பின்புறம் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து காரில் ஏற்றினர். அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தம்பி, அக்காவை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் செல்வதை பார்த்து சத்தம் போட்டபடி பின்னால் ஓடினார். ஆனால், அதற்குள் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.  இதுகுறித்து,  இளம்பெண்ணின் தந்தை பொன்னூர் போலீசில் புகார் செய்தார்.

அதில், செய்யாறை சேர்ந்த  பைனான்ஸ் அதிபர் சங்கர்(50), அவரது சகோதரர் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்ரீதர்(40) மற்றும் பைனான்ஸ் ஊழியர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் சேர்ந்து மகளை  காரில் கடத்திச் சென்றதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை கடத்திய பைனான்ஸ் அதிபர், போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : teenager , 4 people, teenager abducted in car
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை