சென்னை: நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் தனித் தனியாக தேர்தல் நடத்துவது அதிமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிற எண்ணம் அதிமுக அரசுக்கு இல்லை என்று துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.