வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் உள்ள சம்பர்லைன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றை இன்ஜின் கொண்ட, ‘பிளாடஸ் பிசி12’ என்ற விமானம் புறப்பட்டு சென்றது. அதில், 12 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானி, 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.