×

மடத்தில் வைத்து பாதிரியார்கள் 4 முறை என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர்: சுய சரிதையில் கன்னியாஸ்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி மடத்தில் வைத்து  4 முறை என்னை பாதிரியார்கள் பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று கன்னியாஸ்திரி லூசி தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரி மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி புகார் கூறி பல நாட்கள் ஆன பின்னரும் முதலில் அவர் மீது ேபாலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து  கேரளாவில் பல்வேறு பகுதிகளை ேசர்ந்த கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோவை கைது செய்யக்கோரி கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் பங்கேற்ற லூசி என்ற கன்னியாஸ்திரிக்கு எதிராக அவர் சார்ந்த சபை கடும் நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் அவரை மடத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும் கன்னியாஸ்திரி பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கியது. இதையடுத்து இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி கன்னியாஸ்திரி லூசி, வாடிகனில் உள்ள ேபாப் ஆண்டவருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி ‘கர்த்தாவின்றே நாமத்தில்’ என்ற பெயரில் தனது சுய சரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.
அதில் உள்ள சில முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் கன்னியாஸ்திரி மடத்தில் வெளியே சொல்ல முடியாத பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. கன்னியாஸ்திரிகளை பாதிரியார்கள் தங்களது இச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர். பல பாதிரியார்கள் பார்வையாளர்கள்போல மடத்திற்கு வந்து கன்னியாஸ்திரிகளை தங்களது ஆசைக்கு இணங்க வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி கர்ப்பிணியாகி குழந்தை பெற்றார். ஆனால் அவரைத்தான் மடத்தி–்ல் இருந்து வெளியேற்றினார்களே தவிர அதற்கு காரணமான பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான் கன்னியாஸ்திரி ஆன பிறகு 4 முறை என்னை சில பாதிரியார்கள் பலாத்காரம் செய்ய முயன்றனர். கண்ணூர் அருகே உள்ள கொட்டியூரில் ராபின் என்ற பாதிரியார் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து தாயாக்கியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த பாதிரியாருடன் கேரளாவின் பல்வேறு மடங்களில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு தொடர்பு உண்டு. அதனால் தான் அவர் பலாத்கார புகாரில் சிக்கியபோது சில கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். என்னையும் அவர் வலையில் விழ்த்த முயன்றார். மடத்தில் புதிதாக சேரும் இளம் கன்னியாஸ்திரிகளை மூத்த கன்னியாஸ்திரிகள் ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றனர். இதுபோல் பாதிரியார்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.
பாதிரியார்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பல கன்னியாஸ்திரிகள் மடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதுபோன்ற பல திடுக்கிடும் தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகம் வெளியே வந்தால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : accuser ,clergy ,times ,Nun ,Priests , Priests attempt ,rape, 4 times,monastery, Nun
× RELATED சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!