சென்னை: பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தொடர் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை, குமரி, நீலகரி, திருவள்ளூர், காஞ்சி, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளது என்று பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.