×

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். நாளை விடுமுறைக்கு ஈடாக பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : School ,Chennai ,colleges , School and colleges in Chennai tomorrow due to heavy rains
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி