×

அயோத்தி தீர்ப்பு மறுசீராய்வு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலக கூட்டம் தேசியத் தலைவர் எம்.கே. பைஜி தலைமையில் நடந்தது. தேசியத் துணைத்தலைவர்கள் ஷர்புத்தீன், தெஹ்லான் பாகவி, பொதுச் செயலாளர்கள் அப்துல் மஜீத், முஹம்மது ஷபீ, தேசியச் செயலாளர் டாக்டர் தஸ்லீம் அகமது ரஹ்மானி மற்றும் செயலக உறுப்பினர்கள் பி.கோயா, அப்துல் மஜீத் பைஜி, நெல்லை முபாரக், இல்யாஸ் முகமது தும்பே, அப்துல் சத்தார், யாஸ்மீன் பாரூக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாபர் மசூதிக்கான நீதியை உறுதிப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது,  பாபர் மசூதிக்கு நீதிகேட்டு வருகிற 6ம் தேதி நாடு தழுவிய அளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : SC ,Supreme Court ,Ayodhya ,announcement ,Party , Ayodhya verdict, review, petition in Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...