×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாய்தகராறில் இளம்பெண் கழுத்தறுப்பு: மற்றொரு பெண் கைது

அண்ணாநகர்: விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி முனியம்மாள் (26). இவர், நேற்று அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலைய முதல் நடைபாதையில் அமர்ந்து தனது கணவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிரியா (24) என்பவர், முனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென முனியம்மாளின் கழுத்தை அறுத்தார்.

அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோயம்பேடு போலீசார், பிரியாவை கைது செய்து விசாரித்தனர். அதில், முன்விரோத தகராறில் முனியம்மாள் கழுத்தை அறுத்தேன், என அவர் தெரிவித்துள்ளர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : Coimbatore , Goyambedu, young, ass
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...