×

பனிச்சரிவு 2 வீரர்கள் பலி

ஜம்மு:  லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பனிபடர்ந்த தெற்கு சியாச்சின் மலை உச்சியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 18 ஆயிரம்  அடி உயரத்தில் உள்ள இந்த பகுதியில் அதிகாலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிருக்கு போராடினர். இது பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் ராணுவ ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Tags : Avalanche ,soldiers , Avalanche, soldiers killed
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து