×

மகாராஷ்டிராவில் பாலத்தில் இருந்து வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர் பலி

துலே: மகாராஷ்டிராவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், பாலத்திலிருந்து கவிழந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாயினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் புறப்பட்டது. விசூர் என்ற கிராமம் அருகே சலிசாகான்-துலே நெடுஞ்சாலையில், ஒரு பாலத்தை வேன் கடந்தபோது, அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர்களை உடைத்துக் கொண்டு போரி ஆற்றில் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாயினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். கரும்பு அறுவடைக்காக உஸ்மனாபாத் சென்றபோது இவர்கள் விபத்தில் சிக்கினர். விபத்து நடந்த இடத்தில் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் துலேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Maharashtra Maharashtra , Maharashtra, van topples killing 8 workers
× RELATED மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன...