×

சென்னை குண்டாஸ் கைதி தற்கொலை முயற்சி

சேலம்: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சாம்பார் பிரகாஷ்(30). இவர் மீது வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருக்கிறது. சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், தொடர்ந்து சிறையில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததால் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து 23 கைதிகளை போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்க அழைத்து வந்தனர். வயிறு வலிப்பதாக கூறியதால் சாம்பார் பிரகாசும் அழைத்து வரப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர், எண்டாஸ்கோபி மூலம் சோதனை செய்யலாம் என்றும், அதுவரை மருத்துவமனையில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்குமாறும் கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சாம்பார் பிரகாஷ், டாக்டரிடம் தகராறு செய்து தான் வைத்திருந்த பிளேடால் கழுத்து பகுதியை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் அடைத்தனர். அவரிடம் பிளேடு எப்படி வந்தது? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Tags : prisoner ,suicide ,Chennai , Attempted suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை