×

உடுமலை சங்கர் ஆணவக்கொலை கவுசல்யாவின் தாய், பாட்டி கஞ்சா வழக்கில் கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே குப்பம்பாளையம் பகுதியில் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த போதையம்மாள் (70) வீட்டில் சோதனை நடத்தியபோது, 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விசாரணையில் போதையம்மாளுக்கு அவரது மகள் அன்னலட்சுமி கஞ்சா வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போதையம்மாள், பழநி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அவரது மகள் அன்னலட்சுமி (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் பழநி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான அன்னலட்சுமி கடந்த 2016, மார்ச் 13ம் தேதி உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் முன்னாள் மனைவியான கவுசல்யாவின் தாய் ஆவார். இக்கொலை வழக்கில் அன்னலட்சுமியும் கைதாகி விடுதலையானவர்.

Tags : Kausalya , Arrested
× RELATED ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்...